புதன், 8 ஏப்ரல், 2026



 

மரப்பாச்சி சொன்ன ரகசியம் - யெஸ்.பாலபாரதி  எழுதிய நூலினைப்படித்தேன். நூற்றுப்பதினொறு பக்க அளவில் அமைந்திருந்தது. அளவில் சிறிய நூல் வடிவம் என்றாலும் கருத்தின் சாரம் மிக முக்கியமானவை. நாம் அனைவரும் அறிந்து கொள்ளவும், விழிப்புணர்வு அடையவும் அனைவருக்குமான அல்லது அனைத்து வயதினரும் ஒருமுறையாவது அவசியம் படிக்க வேண்டிய நூல் என்றே கூறுவேன். இதன் கதைக்களம் பாலியல் சார்ந்தது. வயதான முதியவர் அண்டை வீட்டார் என்ற நம்பிக்கையில் பெற்றோர்கள் நம்பி அனுப்புகின்றனர்.அவர் சிறுமியிடம் தவறான தொடு உணர்வை கடைப்பிடிக்கின்றார். மேலும் குழந்தையை மிரட்டி இதை நீ வீட்டில் கூறினால் உன்னைத்தான் தண்டிப்பார்கள் என்று கூறிவிடுகின்றார். அதன் பிறகு அக்குழந்தையின் நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகளில் பெரும் மாற்றத்தைச் சந்திக்கின்றாள். பின்பு பல நாட்களுக்கு பிறகு பெற்றோரிடம் தெரிவிக்கின்றாள். அதன் பிறகு பெற்றோர்கள் எடுத்த முடிவு ஒருபுறமும், குழந்தையின் மரப்பாச்சி பொம்மை அந்த முதியவரை தண்டிப்பது குறித்த ஆசிரியரின் புனைவு எழுத்தும் கதைக்கு ஆறுதலைத் தருகின்றது. ஆனால் உண்மையில் எத்தகைய தண்டனை குற்றவாளிக்குக் கொடுத்தாலும் உடலைத்தாண்டி மன ரீதியானப் பாதிப்பிலிருந்து குழந்தையானது வெளிவருது இயலாத ஒன்றேயாகும். எனவே தான் இத்தகைய அநீதிதிலிருந்து குழந்தைகள் தங்களை தற்காத்து கொள்ள இத்தகைய கதைச் சொல்லாடல்கள் மிக அவசியாக வந்தமைகின்றது. மேலும் எல்லா நேரங்களிலும் எல்லோரும் நம்முடன் பயணிப்பதில்லை. எனவே நம்மை நாமே தற்காத்துக்கொள்ள தயாராக வேண்டும் என்பதையும் கதையில் பேசப்பட்டுள்ளது.

குறிப்பாக சிறார்களுக்கு ஏற்படும் தொல்லையும், அதனை எவ்வாறு அவர்கள் எதிர்கொள்ள வேண்டும் என்றும், மன ரீதியாக அவர்கள் பாதிப்பிற்கு உள்ளாகி அதிலேயே அல்லது அதன் நினைவினால் அவர்கள் வாழ்நாள் முழுவதுமாக எதிர்கொள்ளும் மனப்போராட்டம் பற்றியும் நம்மை விரிவாக சிந்திக்க வைக்கின்றது இந்நூல். அதே போன்று பெற்றோர்களும் தமது குழந்தைகளிடம் பாலியல் சார்ந்த அடிப்படையான விழிப்புணர்வை அவர்களுக்கு வழங்க வேண்டிய தேவை இருக்கிறது என்பதையும் பேசுகிறது.  தொடுதலில் வித்தியாசங்கள் மற்றும் பிற விழிப்புணர்வையும் குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே பெற்றோர்கள் கற்றுத்தர முன் வரவேண்டும்.
            சமகாலத்திற்கு இது மிகுந்த தேவையான விவாதப் பொருளாக கதைக்களம் அமைந்துள்ளது. பாலியல் சார்ந்த குற்றங்கள் நாளுக்குநாள் அதிகாரித்துக்கொண்டே வரும் இத்தகைய சூழலில் நாம் அவற்றைப் பற்றி மனம் திறந்து உரையாடவும், அதுப்பற்றி குழந்தைகளுக்கு பெற்றோர்கள் முதலில் இல்லத்திலும்,   கல்வியில் இது போன்ற சிறார் இலக்கியங்களைப் பெற்றோர்கள் முதலில் படித்தும், பின்பு குழந்தைகளுக்கு படிக்கவும் பரிந்துரை செய்வதன் மூலமாகவே இத்தகைய பாலியல் சார்ந்த பிரச்சினைகளிலிருந்து அவர்கள் தங்களை தற்காத்துக் கொள்ள உதவும்.

            மரப்பாச்சி என்பது வெறும் பொம்மையாக மட்டுமே நமக்குத் தோன்றினாலும், குழந்தைகளுக்கு அவர்கள் உளச்சிக்கலில் உள்ள தருணங்களில் கூடுதலாக தமது மனதின் குரலாக, தமது எண்ணங்களை வெளிப்படுத்த அல்லது காதுகொடுத்து கேட்கவும் இந்த மரப்பாச்சி பொம்மையே அவர்களுக்கு உதவுகிறது. பெற்றோர்கள் கண்டிப்புடன் இருப்பது ஒருபுறம் தேவை என்றாலும், அன்றாடம் குழந்தைகளிடம் அன்பொழுகப் பேசி அவர்கள் எண்ணங்களை தயக்கமின்றி கூறுவதற்கான வெளியை நாம் ஏற்படுத்திக்கொடுக்க தவறவேண்டாம்.  இதனால் அவர்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை மறைக்காமல் பெற்றோரிடம் உடனே தெரிவித்து விடுவார்கள் என்பதையே கதை உணர்த்துகிறது.

கூடுதலாக சில குறிப்புகளையும்  காண்பித்துச் செல்வது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது. குறிப்பாக மரப்பாச்சி  பொம்மையானது ஆண்,பெண்  என இருபாலரின் உடை, உடல் வேறுபாட்டைப் பற்றி அறிய இவை பயன்படுத்தப்பட்டுள்ளது. நுண் இயங்குத் திறன் (ஃபைன் மோட்டார் ஸ்கில்ஸ் – fine motor skills) விரல்களைக் கொண்டு சிறிய பொருட்களைப் பிடித்து வேலை செய்யும் திறன் குறித்தும், சட்டைப் பட்டன் போடுவது, பென்சில் பிடித்து எழுதுவது, கோட்டுக்குள் எழுதுவது என இவற்றிற்கெல்லாம் மணலில் விரல்களால் விளையாடுவது, விரல்களால் எடை தூக்குவது போன்ற பயிற்சிகள் உதவும் என்கிறார்.

பாதுகாப்பான தொடுதல், பாதுகாப்பாற்ற தொடுதல் (safe Touch – Unsafe Touch) பற்றி அறிதல் மிக அவசியமான ஒன்றாகும். அதில் தாய் தந்தையர் தவிர்த்து மற்றவர்கள் உடலின் அந்தரங்கமான பகுதியை தொடுதல் மற்றும் கூசும்படியாகவோ, வலி ஏற்படுத்தும் செயலில் ஈடுபட்டால் உடனடியாகச் சத்தம் போட வேண்டும். அல்லது பெற்றோரிடம் உடனே தெரிவிக்குமாறு குழந்தைகளுக்கு அறிவுறுத்தல் செய்திருக்க வேண்டும். கூடுதலாக 1098 என்ற தொலைபேசி எண்ணுக்கு அழைத்தும் பேசலாம்  என்பதையும் நூலின் வழியாக அறிய முடிந்தது. சிறார் இலக்கிய வரிசையில் மிகவும் கவனப்படுத்தப் பட வேண்டிய நூல் என்றால் அதுமிகையாகாது. எனவே அனைவரும் படிக்கலாம்.

 




செவ்வாய், 16 செப்டம்பர், 2025

ARTICLE 15 சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் - சா.திருவாசகம்

 

    Article 15 என்ற இந்தி திரைப்படம் குறித்த தனது பார்வையை எழுதி நூலாக வெளிக்கொண்டு வந்துள்ளார் தோழர் சா. திருவாசகம்.

    ஒரு திரைப்படத்தைக் காணும் பொழுது அது ஏற்படுத்தும் தாக்கம் என்பது ஒரு வகையான அனுபவம் என்றால் அதே திரைப்படம் குறித்த நூலை வாசிப்பது என்பது வேறு வகையான அனுபவம். வாசித்தல் என்பது கற்பனை வெளிக்கான திறப்புகள். அது பல்வேறு விதமான தாக்கங்களை, கோணங்களை நமக்கு தருகின்றது. 

    தோழர் சா.திருவாசகம் இந்த படத்தின் மையக்கருத்தை உள்வாங்கி ஒவ்வொரு காட்சியையும் சமகாலத்தின் சமூக நிகழ்வுகளுடன் பொருத்திப் பார்த்து எழுதிச் செல்கிறார். தலித் அரசியல், வர்க்க அரசியல் உள்ளிட்ட கோட்பாட்டு சிந்தனைகளை பொறுத்தமான காட்சிகளில் குறிப்பிட்டு எழுதி காட்சி மொழியை வேறுவிதமான தளத்திற்கு நகர்த்தியுள்ளார்.  

ஏனென்றால் இப்படியான தீவிரத்தன்மை கொண்ட திரைப்படத்தை வெறுமனே பார்த்துவிட்டு கடப்பது என்பதே மிகவும் எளிதான காரியம் இல்லை. படம் பேசும் தீவிரத்தன்மையை உள்வாங்கி மேலும் கூர்மையாக அணுகி எழுதும் போது படம் வேறு வேறு திறப்புகளை நிகழ்த்திச் செல்கிறது.  


குறிப்பாக தலித் சிந்தனையோடு இந்த படத்தை அணுகும் போது மேலும் நுட்பமாக புரிந்து கொள்ள இந்நூல் துணைச் செய்கிறது. காட்சி மொழியில் அனைத்தையும் சாத்தியப்படுத்தி விட முடிவதில்லை. அத்தகைய இடத்தை எழுத்து மொழி பூர்த்தி செய்கிறது. எழுத்தில் கூறமுடியாத சில இடங்களை மிக எளிதாக காட்சிப்படுத்தி விட்டு செல்வதையும் பார்க்க முடிகின்றது . 


எனவே காட்சி மொழியையும் எழுத்து மொழியையும் ஒருசேரவே கவனத்தில் நாம் கொள்ள வேண்டிய தேவை இங்கு உள்ளது. இன்றைக்கு சுதந்திரம் என்பது எல்லா தளங்களிலும் எவ்வாறு தரப்படுகிறது என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று. உதாரணமாக ஆசிரியர் நூலில் குறிப்பிடுவதைப் போல அட வீட்டில் இருக்கும் எலி தொல்லை தாங்க முடியல என்கிற பிரச்சனைகளை எல்லாம் பேசி படங்கள் எடுக்கப்பட்டிருக்கும் இன்றைய சூழலில் ஆர்ட்டிகள்-15 திரைப்படம் எந்த வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது என்பதை அறிய நாம் இந்தியச் சமூக சூழலும் சினிமா சூழலும் அறிந்தவராக இருக்க வேண்டும் . 


இந்நூலை வாசித்தபிறகு நான் உணர்ந்தவைகளும், எனக்குள் எழுந்த கேள்விகளும்... 


1.சுயசாதி விமர்சன கண்ணோட்டத்தை கொண்டு இயங்குவது அவசியம்.

2.பாலியல் வல்லுறவுக்கு அதிகமாக பாதிக்கப்படுவது தலிப் பெண்கள் மட்டுமே ஏன்?

3.டெல்லியில் நிர்பயா என்கிற பெண்ணுக்கு நேர்ந்த வன்கொடுமை போல தலித் பெண்களுக்கு நேரும் வன்கொடுமைகள் தேசிய அளவில் தலைப்புச் செய்தியாக மாறுவதே இல்லை ஏன்? அல்லது மாநில மாவட்ட செய்தியாக கூட வெளிவர விடாமல் செய்வது எது ?

5.இது "சாதாரண தலித் கேஸ் சார்" என்ற வரி

6.தினக்கூலிப் பணி செய்யும் சிறுமிகள் 25 ரூபாயிலிருந்து 28 ரூபாயாக கேட்டதால் அவர்களை கொலை செய்திருக்கும் சம்பவம் சமூகத்தின் மனநிலை தான் என்ன?என்று மனதை உலுக்கும்படியாக ஆசிரியர் கேள்வி கேட்கின்றார்.

7.நவீன தொழில்நுட்பம் வளர்ந்த இன்றைய காலகட்டத்திலும் தொலைபேசி சாதனங்களின் வழி ஆதாரம் திரட்டும்போது தலித் வன்கொடுமை வழக்குகளில் மட்டும் பாகுபாடும் யாதொரு தகவலும் வெளியாகாமல் பார்த்துக் கொள்வது என்பது எவ்வளவு ஏமாற்றுத்தனம்?

8.அதிகாரம் தனக்கு இசைந்து போகாதவர்களை ஒழித்து கட்டவும் தயங்குவதே இல்லை. சாதி இந்து மருத்துவருக்கே இந்த நிலை என்றால் தலித் மருத்துவரான மாலதியின் கதி என்ன?

9.நீதிக்காக அவர்களிடம் எப்போதும் கையேந்தி நிற்கிறோம். ஆனால், நமக்கான நீதியை பெற போராட்டமே சாத்தியம் என்கிறார்.

10.இந்திய சாதி அமைப்பு குறித்து முகலாயர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் வார்த்தைகள் - சாதி அமைப்பின் இயங்கியல் முறை குறித்து அறிந்து கொள்ள முயற்சித்தால் பைத்தியம் பிடித்து விடும் என்கிறார்கள்.

11.சாதி, அதிகார வர்க்கத்திற்கு எதிராக போராடினால் குரல் எழுப்பினால் அவர்கள் தேச விரோதிகளாக மாற்றப்படுவார்கள்.

12.படத்தில் வரும் ஒரு வசனம் "உயரத்தில் இருக்கும் பார்ப்பனர்கள் என்றைக்கேனும் ஒரு நாள் கீழே வந்து தான் ஆகணும்" என்ற வரிகள் அவர்களை அவர்களே சுய விமர்சனம் செய்யத் தூண்டுகின்றது.

சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் என்கிற இந்த உன்னத நிலையை அனைவரும் உணரவும் அதன் வழி நடக்கவும் நோக்கியே ஆர்ட்டிக்கிள் 15 என்கிற படமும், இந்த நூலும் வலியுறுத்துகிறது.

சமூக அக்கறையில் ஆர்வம் கொண்ட அனைவரும் இந்நூலை கட்டாயம் வாசிக்க வேண்டும் என பரிந்துரைக்கின்றேன்..

திங்கள், 11 ஆகஸ்ட், 2025

ஆதனின் பொம்மை - (இளையோர் நாவல்) உதயசங்கர்



            

ஆதனின்  பொம்மை வழி  பண்பாட்டின் வேர்களை அடைதல்

 

     

 

    சிறார் இலக்கியத்தின் வடிவில் சிறார்களுக்கு மட்டும் அல்ல இன்றைய காலச்சூழலில்  பெரியவர்களும் இந்நூலைப் படித்துவிடத்தான் வேண்டும் என்பேன். ஏன் என்றால் சாதியினாலும், மதத்தினாலும் மனிதன் இன்று இறுக்கமானச்சூழலுக்குள் ஆட்ப்பட்டுள்ளான் அல்லது அவனை  காலச்சூழலுக்குள் சகமனிதனே தள்ளி வந்து விட்டுள்ளான் எனலாம். மேலும் அவன் அவனுடன் சேர்ந்து வாழும் சகமனிதனை  சமூகத்தில் வைத்துப் பார்க்கும் இடமானது வேறென்றாகவே இருந்து வருகிறது. நாம் அறிய முடியாத வரலாற்றுக் காலத்திற்கு புனைவின்  வழியாக நம்மை (வாசகனை) அழைத்துச் செல்கின்றார். மனிதனது அறிவும், அவனது உயர்ந்த எண்ணங்களும், வாழ்வியல் சிந்தனை முறைகளும் காலம் தோறும் மாற்றத்தை எதிர்கொண்டே வந்துள்ளது. நாம் மறந்த அல்லது நமக்குத் தேவையான வாழ்வியல் கூறுகளைப் புனைவின் வழி நமக்கு கடத்தி, அதனைச்சிந்தனை முறையிலும் நடைமுறை வாழ்விலும் கடைப்பிடிக்க வழிகாட்டுகிறார்ஆசிரியர்.


    கேப்டன் பாலு தன் மாமா (கந்தசாமி) வீட்டுக்கு விடுமுறை காரணமாக மதுரை - கீழடி செல்வதாக கதைத் தொடங்குகிறது. அத்தை - லட்சுமியும், மகள் - மதுமிதாவும் அறிமுகப்படுத்தப் படுகின்றாள். மதுமிதா விளையாட்டு, படிப்பு, வாசிப்பு என பல தளங்களிலும் சிறந்து விளங்கக் கூடியவள். புனைவின் வழியாக சங்க காலத்திற்கு முன்புள்ள பெயர்கள், அவர்கள் வாழ்வில் கடை பிடிக்கும் நற்பண்புகள் பற்றியெல்லாம் விவரிக்கிறது நாவல்.
    ஆதன், தங்கை வெண்ணிலையும், மதுரையில் ஓடும் வற்றாத நதியாம் வைகைப் பற்றியும், பழங்காலத்தில் எல்லோருடைய குழந்தைகளையும் தங்கள் குழந்தைகளாகத்தான் பாவிப்பர். பிரித்துப் பார்க்கும் (சாதி) மனநிலை அன்று இல்லை. மேலும் ஆதியில் ஒரே குடும்பத்தில் வசித்தவர்கள் தான் குயவர், மருத்துவர், வலைஞர், கொல்லர், தச்சர், வேளாளர், நகரசுத்தி என அனைவரும் ஒன்றாக இணைந்து வாழ்ந்தனர். ஆனால் இன்றைக்கு சாதி, வர்ணமென்று கூறி பிளவுபட்டுக் கடக்கிறது சமூகம். 
    மேலும் திணை - (நிலத்தில்) ஒரே இடத்தில் குடியிருப்பவர்களை நிலைக் குடிகள், ஊர் ஊராக அலைந்து வாழ்பவர்களை அலைக்குடிகள் என்றும் கூறுவர்அன்று கல்வி, வேலையில் எதையும் செய்வதற்கு அவர்களுக்கு முழு சுதந்திரம் இருந்தது.
    பாலுவின் கேள்வியாக இன்றைய சமகாலப் பிரச்சினைகளான சாதி, மாணவர்களின் கைகளில் சாதிக்கயிறு, சாதிப் பெருமைக்காக ஆணவப்படுகாலை, மனிதன் மனிதனையே சாதி எனும் பெயரால் தனக்கு கீழே ஒருவன், மேலே ஒருவன் என்ற படிநிலைகளை இறுகப்பிடித்துக் கொண்டமையினை எண்ணி வருந்தினான். பள்ளிக்கூடம் தொடங்கி சுடுகாடு செல்லும் வரை சாதியின் தாக்கம் இல்லாமல் இன்று இல்லை. புனைவில் ஆதனின் தோழனாக அந்துவன் ஆனான் அவன். அதே போன்று அக்காலத்தில் பெண் தெய்வங்களே முதன்மையான தெய்வமாகும். அருக்காயி வீராயி, கொற்கையம்மன், வஞ்சியம்மன், வெயிலுகந்தாள், காத்தாயி, பேராய்ச்சி, ராக்காச்சி, அங்காளி என பட்டியல் நீளுகிறது. நாம் அன்றும் இன்றும் பிறரிடம் பகைமை பாராட்டுவதில்லை. தொன்மைக்கால உலகத்தில் எல்லாமே பொதுவாகவே இருந்தது.
    கேப்டன் பாலு தன் மாமா (கந்தசாமி) வீட்டுக்கு விடுமுறை காரணமாக மதுரை - கீழடி செல்வதாக கதைத் தொடங்குகிறது. அத்தை - லட்சுமியும், மகள் - மதுமிதாவும் அறிமுகப்படுத்தப் படுகின்றாள். மதுமிதா விளையாட்டு, படிப்பு, வாசிப்பு என பல தளங்களிலும் சிறந்து விளங்கக் கூடியவள். புனைவின் வழியாக சங்க காலத்திற்கு முன்புள்ள பெயர்கள், அவர்கள் வாழ்வில் கடை பிடிக்கும் நற்பண்புகள் பற்றியெல்லாம் விவரிக்கிறது நாவல்.
    ஆதன், தங்கை வெண்ணிலையும், மதுரையில் ஓடும் வற்றாத நதியாம் வைகைப் பற்றியும், பழங்காலத்தில் எல்லோருடைய குழந்தைகளையும் தங்கள் குழந்தைகளாகத்தான் பாவிப்பர். பிரித்துப் பார்க்கும் (சாதி) மனநிலை அன்று இல்லை. மேலும் ஆதியில் ஒரே குடும்பத்தில் வசித்தவர்கள் தான் குயவர், மருத்துவர், வலைஞர், கொல்லர், தச்சர், வேளாளர், நகரசுத்தி என அனைவரும் ஒன்றாக இணைந்து வாழ்ந்தனர். ஆனால் இன்றைக்கு சாதி, வர்ணமென்று கூறி பிளவுபட்டுக் கடக்கிறது சமூகம். 
    மேலும் திணை - (நிலத்தில்) ஒரே இடத்தில் குடியிருப்பவர்களை நிலைக் குடிகள், ஊர் ஊராக அலைந்து வாழ்பவர்களை அலைக்குடிகள் என்றும் கூறுவர்அன்று கல்வி, வேலையில் எதையும் செய்வதற்கு அவர்களுக்கு முழு சுதந்திரம் இருந்தது.
    பாலுவின் கேள்வியாக இன்றைய சமகாலப் பிரச்சினைகளான சாதி, மாணவர்களின் கைகளில் சாதிக்கயிறு, சாதிப் பெருமைக்காக ஆணவப்படுகாலை, மனிதன் மனிதனையே சாதி எனும் பெயரால் தனக்கு கீழே ஒருவன், மேலே ஒருவன் என்ற படிநிலைகளை இறுகப்பிடித்துக் கொண்டமையினை எண்ணி வருந்தினான். பள்ளிக்கூடம் தொடங்கி சுடுகாடு செல்லும் வரை சாதியின் தாக்கம் இல்லாமல் இன்று இல்லை. புனைவில் ஆதனின் தோழனாக அந்துவன் ஆனான் அவன். அதே போன்று அக்காலத்தில் பெண் தெய்வங்களே முதன்மையான தெய்வமாகும். அருக்காயி வீராயி, கொற்கையம்மன், வஞ்சியம்மன், வெயிலுகந்தாள், காத்தாயி, பேராய்ச்சி, ராக்காச்சி, அங்காளி என பட்டியல் நீளுகிறது. நாம் அன்றும் இன்றும் பிறரிடம் பகைமை பாராட்டுவதில்லை. தொன்மைக்கால உலகத்தில் எல்லாமே பொதுவாகவே இருந்தது.
    கேப்டன் பாலு தன் மாமா (கந்தசாமி) வீட்டுக்கு விடுமுறை காரணமாக மதுரை - கீழடி செல்வதாக கதைத் தொடங்குகிறது. அத்தை - லட்சுமியும், மகள் - மதுமிதாவும் அறிமுகப்படுத்தப் படுகின்றாள். மதுமிதா விளையாட்டு, படிப்பு, வாசிப்பு என பல தளங்களிலும் சிறந்து விளங்கக் கூடியவள். புனைவின் வழியாக சங்க காலத்திற்கு முன்புள்ள பெயர்கள், அவர்கள் வாழ்வில் கடை பிடிக்கும் நற்பண்புகள் பற்றியெல்லாம் விவரிக்கிறது நாவல்.
    ஆதன், தங்கை வெண்ணிலையும், மதுரையில் ஓடும் வற்றாத நதியாம் வைகைப் பற்றியும், பழங்காலத்தில் எல்லோருடைய குழந்தைகளையும் தங்கள் குழந்தைகளாகத்தான் பாவிப்பர். பிரித்துப் பார்க்கும் (சாதி) மனநிலை அன்று இல்லை. மேலும் ஆதியில் ஒரே குடும்பத்தில் வசித்தவர்கள் தான் குயவர், மருத்துவர், வலைஞர், கொல்லர், தச்சர், வேளாளர், நகரசுத்தி என அனைவரும் ஒன்றாக இணைந்து வாழ்ந்தனர். ஆனால் இன்றைக்கு சாதி, வர்ணமென்று கூறி பிளவுபட்டுக் கடக்கிறது சமூகம். 

    மேலும் திணை - (நிலத்தில்) ஒரே இடத்தில் குடியிருப்பவர்களை நிலைக் குடிகள், ஊர் ஊராக அலைந்து வாழ்பவர்களை அலைக்குடிகள் என்றும் கூறுவர்அன்று கல்வி, வேலையில் எதையும் செய்வதற்கு அவர்களுக்கு முழு சுதந்திரம் இருந்தது.
    பாலுவின் கேள்வியாக இன்றைய சமகாலப் பிரச்சினைகளான சாதி, மாணவர்களின் கைகளில் சாதிக்கயிறு, சாதிப் பெருமைக்காக ஆணவப்படுகாலை, மனிதன் மனிதனையே சாதி எனும் பெயரால் தனக்கு கீழே ஒருவன், மேலே ஒருவன் என்ற படிநிலைகளை இறுகப்பிடித்துக் கொண்டமையினை எண்ணி வருந்தினான். பள்ளிக்கூடம் தொடங்கி சுடுகாடு செல்லும் வரை சாதியின் தாக்கம் இல்லாமல் இன்று இல்லை. புனைவில் ஆதனின் தோழனாக அந்துவன் ஆனான் அவன். அதே போன்று அக்காலத்தில் பெண் தெய்வங்களே முதன்மையான தெய்வமாகும். அருக்காயி வீராயி, கொற்கையம்மன், வஞ்சியம்மன், வெயிலுகந்தாள், காத்தாயி, பேராய்ச்சி, ராக்காச்சி, அங்காளி என பட்டியல் நீளுகிறது. நாம் அன்றும் இன்றும் பிறரிடம் பகைமை பாராட்டுவதில்லை. தொன்மைக்கால உலகத்தில் எல்லாமே பொதுவாகவே இருந்தது.
            கேப்டன் பாலு தன் மாமா (கந்தசாமி) வீட்டுக்கு விடுமுறை காரணமாக மதுரை - கீழடி செல்வதாக கதைத் தொடங்குகிறது. அத்தை - லட்சுமியும், மகள் - மதுமிதாவும் அறிமுகப்படுத்தப் படுகின்றாள். மதுமிதா விளையாட்டு, படிப்பு, வாசிப்பு என பல தளங்களிலும் சிறந்து விளங்கக் கூடியவள். புனைவின் வழியாக சங்க காலத்திற்கு முன்புள்ள பெயர்கள், அவர்கள் வாழ்வில் கடை பிடிக்கும் நற்பண்புகள் பற்றியெல்லாம் விவரிக்கிறது நாவல்.
    

ஆதன், தங்கை வெண்ணிலையும், மதுரையில் ஓடும் வற்றாத நதியாம் வைகைப் பற்றியும், பழங்காலத்தில் எல்லோருடைய குழந்தைகளையும் தங்கள் குழந்தைகளாகத்தான் பாவிப்பர். பிரித்துப் பார்க்கும் (சாதி) மனநிலை அன்று இல்லை. மேலும் ஆதியில் ஒரே குடும்பத்தில் வசித்தவர்கள் தான் குயவர், மருத்துவர், வலைஞர், கொல்லர், தச்சர், வேளாளர், நகரசுத்தி என அனைவரும் ஒன்றாக இணைந்து வாழ்ந்தனர். ஆனால் இன்றைக்கு சாதி, வர்ணமென்று கூறி பிளவுபட்டுக் கடக்கிறது சமூகம். 

    மேலும் திணை - (நிலத்தில்) ஒரே இடத்தில் குடியிருப்பவர்களை நிலைக் குடிகள், ஊர் ஊராக அலைந்து வாழ்பவர்களை அலைக்குடிகள் என்றும் கூறுவர்அன்று கல்வி, வேலையில் எதையும் செய்வதற்கு அவர்களுக்கு முழு சுதந்திரம் இருந்தது.
    பாலுவின் கேள்வியாக இன்றைய சமகாலப் பிரச்சினைகளான சாதி, மாணவர்களின் கைகளில் சாதிக்கயிறு, சாதிப் பெருமைக்காக ஆணவப்படுகாலை, மனிதன் மனிதனையே சாதி எனும் பெயரால் தனக்கு கீழே ஒருவன், மேலே ஒருவன் என்ற படிநிலைகளை இறுகப்பிடித்துக் கொண்டமையினை எண்ணி வருந்தினான். பள்ளிக்கூடம் தொடங்கி சுடுகாடு செல்லும் வரை சாதியின் தாக்கம் இல்லாமல் இன்று இல்லை. புனைவில் ஆதனின் தோழனாக அந்துவன் ஆனான் அவன். அதே போன்று அக்காலத்தில் பெண் தெய்வங்களே முதன்மையான தெய்வமாகும். அருக்காயி வீராயி, கொற்கையம்மன், வஞ்சியம்மன், வெயிலுகந்தாள், காத்தாயி, பேராய்ச்சி, ராக்காச்சி, அங்காளி என பட்டியல் நீளுகிறது. நாம் அன்றும் இன்றும் பிறரிடம் பகைமை பாராட்டுவதில்லை. தொன்மைக்கால உலகத்தில் எல்லாமே பொதுவாகவே இருந்தது.
    பெண்களே பிரதானம், முதன்மையாக கொண்டு கொண்டாப்பட்டது. ஆதலனால் பெண் தெய்வமே முதன்மையாகவும் இருந்தது. சூலியம்மன், நெல்லம்மன், முளைப்பாரியம்மன், தாயம்மன், இயக்கியம்மன் என பதிவு செய்து கொண்டே பட்டியலை நீட்டிக்கிறார் ஆசிரியர் உதயசங்கர்.  சிந்து ஆற்றின் கரையெங்கும் பெண் தெய்வங்களே ஆதிக்கம் செலுத்தி வருவதைப் பார்க்க முடிகிறது. நமது வீழ்ச்சி தொடங்கிய இடமானது, உயர்வு, தாழ்வு காரணமாக தமிழ்ச்சமூகம் வீழ்ச்சிப் பாதைக்கு வந்தது எனலாம். நெருப்பினால் (ஆரியத்தினால்) நமது நாகரீகத்திற்கு அச்சுறுத்தல் வந்துள்ளது என்பதை உணர்ந்து விழிப்புடனும், ஒற்றுமையுடனும் நமது முன்னோர்களின்  மரபின் வழி சமத்துவ சமூகம் மலர தொல் எச்சங்களை முழுமையாக  அறிவோம், அதை வாழ்வில் கடைபிடித்து இழந்த மனிதத்தை மீட்போம்.

 

 

 

 

 



 

அதிகாரத்தின் முகங்கள் - (கவிதை) கவிஞர் பூ.ஆசு

 அதிகாரத்தின் முகங்களைக் 

கவிதையின் முன் நிறுத்தி 

கேள்விக்கு உட்படுத்துதல்

 
                  

                          அதிகாரம் முகங்கள் என்ற கவிதையின் வழியாக கவிஞர் பூ.ஆசு அவர்கள், சமூகத்தில் அன்றாடம் நிகழக்கூடிய சமூக அநீதிகளையும், கொடுமைகளையும் நாம் செய்தியாகக் கண்டு கடந்துவிடக்கூடிய இன்றைய காலச்சூழலில் அதனை மிகவும் வலியுடனும், கவனத்துடனும் கவிதையாக மாற்றி, அந்த வலியை, நினைவை எப்படி உங்களால் மறக்க முடிகின்றது? என்று கவிதையின் வழியே தொடர்ந்து கேள்வியாக முன்வைக்கின்றார். இன்றைய தொழில்நுட்ப காலத்தில் நாம் பலவற்றையும் மறைந்து விடுகின்றோம். அல்லது நினைவு கூரத்தவறிவிடுகின்றோம் எனலாம். இத்தகைய நிலையில் தான் இந்த கவிதைப்பனுவலானது மிகுந்த கவனத்தையும், நம் அனைவரும் இதைப்படித்துப் பாதுகாக்கப்பட வேண்டிய ஓர் அறிய நூல் எனலாம். 

இதில் தலைவர்களின் சிலைஉடைப்பு, காவல் துறையில் நடக்கும் அடாவடிகோஷம் போடாவிட்டால் மதவாதம் செய்து படுகொலைச் செய்தல், வேங்கைவயல் ,தாய்மதம் இந்துமதம் திரும்பக்கூறிய சீமான் கருத்துகள், ஸ்ரீ மதி, கழிவு நீர் தொட்டி , விஷவாயு என தொடர்ந்து பலவற்றையும் கவனத்தில் கொண்டு  எழுதிவருகிறார். 

 

இனி 

சவக்குழி தோண்டச்

சொல்பவனைச்

சவ்வு கிழித்து

விட்டெறி

இல்லை

இடரெறினில்

தலை சீவித் தலைநிமிர்

 

என்ற கவிதையைப் படிக்கின்ற பொழுது ஆண்டாண்டுக் காலமாக அதிகாரத்தின்  ஆதிக்க அழுத்தத் தணலில் நிற்க நிர்ப்பந்திக்கப்படும் போதெல்லாம் அடங்க மறுக்கவும், அத்துமீறவும் இக்கவிதை நமக்கு துணை நிற்கும். ஒரு முறை தலைமிர்ந்து பார்! உன் தலைமுறையும் இனி தலைநிமிறும் என்பதை மிக அழுத்தமாகவே இக்கவிதைப் பதிவுசெய்கின்றது.

மிச்சமிருக்கும் ஆவணத்துடிப்பு என்ற கவிதையில் பாலியில் வன்புணர்வைப்பற்றி பேசுகிற பொழுது நம் தேசமெங்கும்  அழிக்கமுடியாத களைச்செடியாக, சீமைக்கருவேலமரமாக வளர்ந்து விட்டது. நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது என்பதை,

சீமைக்கருவேலஞ்

செடிபோல

நீண்டு நிறைந்து

நிற்கின்றன

பாலியல் வன்புணர்வுகள்.

 

டெல்லியில் உழவர்களின் புரட்சியை ஆதரித்து எழுதிய கவிதையில்….

 

அதிகாரக் கட்டமைப்பைத்

தகர்த்தியே நகருவோம்

சோறு போட்ட உன்னைச்

சோதிக்கும் எவனையும்

கூறுபோடுவோம்....      கூறுபோடுவோம்....

 

என உழவர்களின் பக்கமுள்ள நியாயத்தையும், அறத்தையும் மீட்க புரட்சியும், போராட்டமுமே தீர்வு என்கிறார் கவிஞர்.

ஆன்மீகத்தின் பெயரால் காடுகளையும், வளங்களையும் சுரண்டல் செய்யும் நபர்களை (சாமியார்களை) தோலுரிக்கவும், முகத்திரையை வெளிச்சமிட்டுக்காட்டவும்  மறக்கவில்லை கவிஞர். 


கவிதை முழுவதிலும் மாநில அரசு தொடங்கி, மத்திய அரசு (நடுவண் அரசு) அல்லது ஒன்றிய அரசின் அதிகார முகமாக இருந்தாலும் சரி எங்கு அநீதி இழைக்கப்படுகின்றதோ அவ்விடத்தில்  கவிஞர் தம் அறச்சீற்றத்தை கவிதையாக வடித்து தர தவறவில்லை எனலாம். இந்நூலை வாசிக்கின்ற ஒவ்வொரு பொழுதும்  அதிகாரத்திற்கு எதிரான குரல் ஓங்கி ஒலிப்பதனை நாம் செவிக்கொண்டு கேட்கலாம். அது என்றைக்கும் நம் மனதை பிடித்து உலுக்கி, ஆட்டி  கேள்வியை கேட்கும் படி செய்தமையே கவிதையின் வெற்றி எனலாம்.


வெள்ளி, 17 ஜனவரி, 2025

மானுட வாசிப்பு - தொ.பரமசிவன்


மானுட வாசிப்பு - தொ.பரமசிவன்


             தொ.பரமசிவன்  - தொ.ப என்று ஆய்வுலகில் நன்கு அறியப்பட்டவர். இவரின் நேர்காணல் செய்த தொகுப்பினை மானுட வாசிப்பு என்ற தலைப்பில் வாசிக்க நேர்ந்தது. பனுவலை வாசித்த பின்பு அது குறித்த சில கருத்துகளை மட்டுமே இங்கு பதிவிடலாம் என்ற ஆசையில் இப்பதிவு.

     இப்பனுவலில் உள்ளடக்கமாக  அரசியல் -சாதி- மதம், பண்பாடு, புழங்கு பொருள் பண்பாடு, உணவு, ஆளுமைகள், சித்தர் இலக்கியம், கல்வி, மொழி, சுற்றுச்சூழல், தலித்தியம்,பெரியாரியம், தமிழ்த்தேசியம், நாட்டார் வழக்காற்றியல், கோவில், அழகர்கோவில், பாரதியார்,குடும்பம், சமூகம் என  18 தலைப்புகள்  அமைகின்றது.

        அம்பேத்கரை ஏற்றுக்கொண்ட பார்ப்பனர்கள் பெரியாரை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏன் என்றால் தத்துவவாதிகளை ஏற்றுக்கொள்வதில்லை. சங்கரர், மாத்துவர், இராமானுஜர் இவர்களை தவிர்த்து என்கிறார். சாதிகள் தலைதுாக்கியது பக்தி இயக்கத்தோட எழுச்சி பிறகு.

    தெய்வம் என்று சொல்லக்கூடிய வார்த்தை தான் பழையது. கடவுள் என்று சொல்லக்கூடாது என்கிறார். சமண மதம் வீழ்ச்சிக்கான காரணங்களாக அளவுக்கு மீறிய துறவும், ஒழுக்கமும் என்கிறார்.

        முருக, கணபதி வழிபாடு குறித்தும், மதமாற்றம் குறித்தும், சைவ மதத்தின் தோற்றம் குறித்தும், தமிழக வணிகக் குழுக்களில் ஒன்றான அஞ்சு வண்ணத்தவர்கள் குறித்து இதுவரை ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை.  மாடு அடக்குதல் என கூற கூடாது. மாடு அணைதல் என்பதே சரி என்றும், தை முதல் நாள் அல்ல, தைப்பூசம் தான் தமிழர்களுடைய ஆண்டின் தொடக்க நாள் என்கிறார் தொ.ப

    மனித வாசிப்பே பண்பாட்டு ஆய்வு என்கிறார். இவ்வாறு 103 பக்கங்களை கொண்டது இப்பனுவல்.  பல துறை அறிவினை ஒரே தொகுப்பில் அடக்கி தருவது வாசகனுக்கு விருந்தாக அமைகின்றது எனலாம். 

💚💚💚





இந்தி ஒரு வரலாற்றுச்சுருக்கம் - கார்த்திக் புகழேந்தி

 

   இந்தி ஒரு வரலாற்றுச்சுருக்கம் - கார்த்திக் புகழேந்தி 


            இந்தி என்றவுடன் நமக்கு மொழி எதிா்ப்பு என்ற ஒன்றுமட்டுமே நமது பிரஞ்கையில் உதயமாகும்.  அதன் மூலம் மற்றும் பின்னணி குறித்த காரணத்தை நம்மை அறியச்செய்யும் துாண்டல் பணியினை இந்நுால் நிச்சயமாக செய்கின்றது.

     பொதுதளத்தில் அனைவரும் இந்தி பற்றியும், அதன்  தோற்றம் மற்றும் மொழி உருவான விதம் குறித்தும் அறியவும், இந்தித் திணிப்பின் பின்புலம், அதன் காரணம், மொழிப்பாகுபாடு, மொழிப்போராட்டப்பின்னணி, மொழிப்போராட்டத்தில் ஈடுபட்ட மொழிப்போர் தியாகிகள் சிலர் குறித்த பதிவு என இக்குறுநுாலில் இவ்வளவு நீண்ட  கால வரலாற்றின் தகவல்களை செறிவாக கவனப்படுத்திய பாங்கு இங்கு பாராட்டுக்குரியது.

        ஒரே நாடு ஒரே மொழி என்ற சொல்லாட்சிக்கு பின் நிகழ்ந்த நிகழக்கூடிய பதற்றம் நுாலினை வாசித்த பொழுது நம்முள் தொற்றிக்கொள்கிறது. நுாலிலிருந்து “இந்தியைப் புகுத்துவது என்பது அரசியல் உணர்ச்சியால் அல்ல கலாச்சார உணர்ச்சியால். இந்தியை நாம் வன்மையாக எதிர்ப்பதும் அதே கலாசார உணர்ச்சியால்தான்” என்றார் பெரியார். இன்று அரசியல் உணர்ச்சியும் அதில் மேலோங்கியிருக்கிறது. 

    பல மொழிகளை கொன்று குவித்து இன்று இம்மொழி தம்மை உயர்வாக காண்பித்துக்கொள்ள முயலுகின்றது. இன்னும் முயன்று கொண்டுதான் இருக்கின்றது. இத்தகைய அரசியல் சூழலில் நமக்கு நாம் பேசக்கூடிய மொழி குறித்த அக்கரையும் விழிப்புணர்வும்    அவசியமாகின்றது. அதற்கு இத்தகைய நுாலினை வாசித்தல் அவசியமாகும். 

    மற்றொரு மேற்கோள் நுாலிலிருந்து  ஹிட்லரின் படைகள் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டபோது அடிமைப்படுத்தபட்ட பிரதேசங்களில் ஜெர்மன் மொழி கட்டாயமாக்கப்பட்டது. ஒரே ஆட்சி ஒரே கலாசாரம் ஒரே மொழி என்பது பாசிசத்தின் முக்கியக் கொள்கை. 

    மாநில அரசின் செயல்பாட்டிற்கு நிதி தேவையின் போது ஒன்றிய அரசானது துவக்கத்திலிருந்தே  மொழிக்காக ஒதுக்கும் நிதியில் தமிழுக்கு அநீதி செய்துள்ளமையை சான்றுடன் இந்நுாலில் ஆசிரியர் பதிவு செய்துள்ளார். மேலும் நீதிக்கட்சி தொடங்கி சமகால கழக ஆட்சியாளர்கள் வரை தமிழ்மொழிக்கு  அலுவலகம் தொடங்கி கல்விநிலையங்கள் வரை அதற்கான அங்கீகாரம் பெற்றுத்தந்த வரலாற்றையும் குறிப்புகளாக காணமுடிகின்றது.

இந்நுால் மொழி குறித்தான அக்கறையை வாசிக்கின்ற பொழுது ஏற்படுத்தும் என்பது திண்ணம்.

🌳🌳🌳

  














செவ்வாய், 6 ஆகஸ்ட், 2024

சக கவிஞர் கவிதையியல் குறித்த நேர்காணல்கள் - மௌனன் யாத்ரிகா

 சக கவிஞர்  கவிதையியல் குறித்த நேர்காணல்கள் - மௌனன் யாத்ரிகா




         மொழி வந்தடைந்த இடமாகவும், மனிதனின் சிந்தனை வந்தடைகின்ற இடத்தினையும் இருப்பினையும் கவிதையும், கவிஞர்களுமே காலந்தோறும் நம்முள்  வெளிச்சத்தை துாண்டுகின்றனர்.

    அந்தவகையில் சக கவிஞர்கள் என்னும் நுாலின் வழியாக மௌனன் யாத்திரிகா அவா்கள் தமிழில் நவீன கவிஞர்களை சந்தித்து அவர்களின் எழுத்து மற்றும் எண்ண அலைகளை நேர்காணல் வழியாக நமக்கு தொகுத்துத் தந்துள்ளார். இந்த பணியானது மிகுந்த பாராட்டுதலுக்குரியது. ஏன் என்றால் நவீன கவிஞர்கள் பற்றி அறியவும், அவர்களின் கவித்துவப் போக்கு குறித்து அறியவும் முடியும். புதிய கவிஞர்களை நேர்காணலின் வழி அவர்களின் சிந்தனைப் போக்கு மற்றும் கவிதை மனநிலையையும் அறிமுகம் செய்து வைக்கும் முயற்சியாகவும் இது அமைகின்றது. 

    இந்நுாலின் ஆசிரியர் தமிழ் கவிதைவெளியில் நன்கு அனைவராலும் அறியப்பட்டவர் ஆவார். மௌனன் யாத்ரிகா அாியலுார் மாவட்டம்  செந்துறையில் வசிக்கிறார். இவர் திரைத்துறையிலும் தீவிரமாக செயல்பாட்டு வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது,


    கவிஞர்களை பட்டியயிடுதல் என்பது மிகவும் சுலபமான செயல்பாடு அன்று. அது நீண்ட நெடிய நேரத்தையும் காலத்தையும் பிடிக்கும். அந்த வகையில் இன்றைய காலச்சூழலுக்கு அவசியமான ஒன்றாக கவிஞர்களை அறிமுகம் செய்தும் அவர்களின் கவிதை நோக்கம் மற்றும் செயல்பாடுகளை நேர்காணல் வழி நாம் அறிந்து கொள்ள இது எளிதாக அமைந்துள்ளது. இத்தகைய முயற்சியை எடுத்த கவிஞர் மௌனன் யாத்ரிகாகவிற்கு நன்றி. 

    சிற்பி பாலசுப்பிரமணியன், இந்திரன், கலாப்ரியா, மனுஷ்யபுத்திரன், ஆத்மார்த்தி, யவனிகா ஸ்ரீராம், வெய்யில், பெருமாள் முருகன், க.மோகனரங்கன், ரவிசுப்பிரமணியன், அய்யப்ப மாதவன், ரமேஷ் பிரேதன், அழகிய பொியவன், ஆத்மாா்த்தி, இளம்பிறை, மகுடேசுவரன், யாழன் ஆதி, அமிா்தம் சூர்யா, ஸ்ரீநேசன், அசதா, அன்பாதவன், கவிதைக்காரன் இளங்கோ, ஸ்டாலின் சரவணன், பெருந்தேவி, நாச்சியாள் சுகந்தி  என நீண்டதொரு பட்டியல் தொடர்கின்றது.  இப்பட்டியலில் இடம் பெறாத முக்கிய கவிஞர்களும் இடம் பெற கூடும். ஆயினும் கவிஞர்கள் குறித்து அறிய முற்படும் வாசகா்களுக்கு  இந்த நுால் பெரிதும் பயன்படும் என்பதில் ஐயமில்லை. 

        இந்நுாலின் நேர்காணலில் இடம்பெறும் சில  கருத்து தெறிப்பினை மட்டும் கூறி இந்நுாலின் முக்கியத்துவத்திற்கு சான்றாக வந்தமைகின்றது. 

                ஒரு கவிதை எந்தக் காரணத்துக்காகப் படைக்கப்படுகிறது என்பதைவிட கவிதைப் பிரதியின் தன்மை என்னவாக இருக்கிறது என்பதே முக்கியமானதாகி விடுகிறது. -  கவிஞர் இந்திரன்


                உணவில் சைவம் என்பது தாவரவுண்ணிகளாகவும் அசைவம் என்பது புலாலுண்ணிகளாகவும் பிாிந்துநின்றாலும் எல்லா உணவும் இயற்கை விளைவேயாகும். - கவிஞர் ரமேஷ் பிரேதன்

 

                நீதியுணா்ச்சி அல்லது உண்மையை அறியும் திறன் இல்லாதவா்கள் கலை வடிவங்களை உருவாக்குவதற்குத் தகுதி இல்லாதவா்கள். -  கவிஞர் அழகிய பெரியவன்


            உண்மையில் மானுட வாழ்வு என்பதே மாபொிய சூன்யத்திற்கு இலக்கமிட்டுப் பாா்க்கிற ஒரு விளையாட்டுத் தான். - கவிஞர் ஆத்மார்த்தி


இந்தியாவில் செவ்வியல் என்பது சாதி,சமய,பக்தி, ஒழுக்கவாத,நீதியியல் அழகியலாகவும் பாதுகாக்கப்படுகிறது. - கவிஞர் யவனிகா ஸ்ரீராம்


கவிஞர் என்றால்  அவர்தான் ஆகச்சிறந்த அறிவுஜுவி அச்சமூகத்தின் அறிவு மரபின் நீட்சியும் அடையாளமும் என்றே அர்த்தங்கள். -கவிஞர் குட்டிரேவதி


மிழ்க் கவிதையின் சமகால போக்குகள் குறித்து அறிய  அவசியம்  வாசிக்க வேண்டிய பனுவல் இது.


***********************************************************************************



  மரப்பாச்சி சொன்ன ரகசியம் - யெஸ்.பாலபாரதி   எழுதிய நூலினைப்படித்தேன். நூற்றுப்பதினொறு பக்க அளவில் அமைந்திருந்தது. அளவில் சிறிய நூல் வடிவம்...